நத்தம் அருகே 10 அடிநீள மலைப்பாம்பு உயிருடன் மீட்பு

 

நத்தம், அக்.23: நத்தம் அருகே ஆவிச்சிபட்டி பாண்டியன் நகர் அருகே தனியார் கிரசர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து வந்துள்ளது. இதைப் பார்த்த அப்பகுதியினர் நத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு நிலைய அலுவலர் (பொ) அம்சராஜன் தலைமையிலான வீரர்கள் சென்று, மலைப்பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையினர் வசம் ஒப்படைத்தனர்.

இதேபோன்று நேற்று மதியம் மூங்கில்பட்டி அருகே குமரேசபுரத்தில் ஊர்க்காவலன் என்பவர், தனது குடியிருப்பு பகுதியில் மலைப்பாம்பு இருப்பது குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து தீயணைப்பு நிலைய வீரர்கள், சம்பவ இடத்துக்குச் சென்று, அங்கிருந்த 10 அடி நீள மலைப்பாம்பை லாவகமாக உயிருடன் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து வனத்துறையினர், அவற்றை கரந்தைமலைப் பகுதியில் கொண்டுபோய் விட்டனர்.

The post நத்தம் அருகே 10 அடிநீள மலைப்பாம்பு உயிருடன் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: