கோவில்பட்டி நகராட்சி கூட்டம் 33 தீர்மானங்கள் நிறைவேற்றம்

கோவில்பட்டி, அக். 23: கோவில்பட்டி நகராட்சியின் சாதாரண கூட்டம், சேர்மன் கருணாநிதி தலைமையில் நடந்தது. கமிஷனர் கமலா முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். சாலை, வாறுகால் வசதி உள்ளிட்ட 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஏஞ்சலா, தவமணி, விஜயகுமார், லூர்துமேரி, சீனிவாசன், விஜயன், ராமர் உள்ளிட்டோர் தங்களது வார்டு பிரச்னைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக பேசினர்.குறிப்பாக மழை காலம் துவங்குவதால் கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர். சாலை, மின்விளக்கு, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலளித்த நகராட்சி சேர்மன் கருணாநிதி, ‘உங்களது அனைத்துகோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும்’ என்று உறுதியளித்தார்.

The post கோவில்பட்டி நகராட்சி கூட்டம் 33 தீர்மானங்கள் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: