நாகர்கோவிலில் ராப்பிட் சதுரங்க போட்டி 26ம்தேதி நடக்கிறது

நாகர்கோவில், அக்.23 : நாகர்கோவில் ஒய்.எம்.சி.ஏ. இவான்ஸ் செஸ் கிளப் சார்பில் ராப்பிட் சதுரங்கப் போட்டி மற்றும் அபாக்கஸ் போட்டி வருகிற 26ம் தேதி காலை 9.30 முதல் மாலை 6 மணி வரை நாகர்கோவில் ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் நடைபெற உள்ளது. இப்ேபாட்டி 7 வயது முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 6 பிரிவுகளாக நடக்கும். அந்த வகையில் 7, 9, 11, 13, 15, 19 ஆகிய வயது பிரிவுகளில் நடக்கும். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு கோப்பை வழங்கப்படும். = நடப்பு ஆண்டிற்கான பாரதியார் குடியரசு தின மண்டல சதுரங்க விளையாட்டு போட்டியில் 17 வயதிற்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் முதலிடம் பெற்ற லிட்டில் பிளவர் பள்ளி மாணவி அலின் கிருபாவை கவுரவித்து சிறப்பு பரிசும் வழங்கப்படும். போட்டியில் பங்கு பெற விரும்புபவர்கள் evanschessclub.com இணையதளத்தில் 25ம் தேதி மாலை 7 மணிக்குள் பதிவு செய்து கொள்ளலாம். இத்தகவலை கிளப் செயலாளர் ஜீவன்குமார் தெரிவித்துள்ளார்.

The post நாகர்கோவிலில் ராப்பிட் சதுரங்க போட்டி 26ம்தேதி நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: