அதிமுக செயல்வீரர் கூட்டம்

பாலக்கோடு, அக்.23: மாரண்டஅள்ளியில் வடக்கு ஒன்றியம் மற்றும் பேரூர் சார்பில், அதிமுக செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம், தர்மபுரி மாவட்ட செயலாளர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ தலைமையில் மாரண்டஅள்ளியில் நடந்தது. வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கில் செந்தில், நகர செயலாளர் கோவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்துகொண்டு பேசினார். இக்கூட்டத்தில் மாநில விவசாய பிரிவு தலைவர் அன்பழகன், ஜெ பேரவை மாவட்ட செயலாளர் வெற்றிவேல், மாவட்ட அவை தலைவர் நாகராசன், தெற்கு ஒன்றிய செயலாளர் கோபால், முன்னாள் ஒன்றிய செயலாளர் ரங்கநாதன், டாக்டர். அசோகன், மாவட்ட கவுன்சிலர் சரவணன், நகர செயலாளர் ராஜா, தகவல் தொழில்நுட்ப மாவட்ட செயலாளர் ராஜா, ஒன்றிய அவைத்தலைவர் சண்முகம், ஒன்றிய இணை செயலாளர்கள் அண்ணாமலை, ராஜம்மாள் மணிவண்ணன், பொருளாளர் ராஜேந்திரன், நகர நிர்வாகிகள், மல்லாபுரம் சதீஷ், சுரேஷ், அரவிந்தன், ரமேஷ், வெங்கடேசன், புதூர் சுப்ரமணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொன்டனர்.

The post அதிமுக செயல்வீரர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: