கட்டுமான பொருட்கள் திருடிய 2 பேர் கைது

தர்மபுரி, அக்.23: காரிமங்கலம் அருகே உள்ள மோதூர் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி மனைவி மாரி(45). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். தண்டபாணி இறந்து விட்டார். மாரி தனது மகனுடன் பெங்களூருவில் தங்கி கூலிவேலை செய்து வந்தார். வீட்டில் தண்டபாணியின் தாய் சின்னபிள்ளை மட்டும் இருந்து வந்தார். இந்நிலையில் மாரி வீட்டை புதுப்பிப்பதற்காக பெங்களூருவில் இருந்து இரும்பு கேட், ஏணி, ஜன்னல்கள், கைப்பிடி உள்ளிட்ட கட்டுமான பொருட்களை வாங்கிவந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டின் மாடியில் வைத்திருந்தார். இந்நிலையில் கடந்த 1ம்தேதி வீட்டின் மாடியில் இருந்த கட்டுமான பொருட்களை காணவில்லை. இதுகுறித்து மாரி காரிமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் (27), நாராயணன் (40) ஆகியோர் திருடியது தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த கட்டுமான பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

The post கட்டுமான பொருட்கள் திருடிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: