ஆசிரியர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி ஆலோசனை கூட்டம்

தஞ்சாவூர், அக். 23: தஞ்சாவூர் மாவட்ட அரசு மாதிரிப்பள்ளியில் மாவட்டத்தில் உள்ள வட்டார அளவிலான மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான உயர்கல்வி வழிக்காட்டி முதல்கட்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாவட்ட அரசு மாதிரி பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் குமரன் வரவேற்றார். இந்த கூட்டத்தில், 51 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்றனர். இதில் உயர்கல்வி தொடர்பான 19 வகையான தேர்வுகள், படிப்புக்கள் பற்றி கூறப்பட்டது. மாவட்ட உயர்கல்வி வழிக்காட்டி ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை டயானா நன்றி கூறினார்.

The post ஆசிரியர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: