பட்டா கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த ரவுடி சிறையில் அடைப்பு

அறந்தாங்கி, அக். 23:அறந்தாங்கி அருகே சாலையில் வந்தவரிடம் பட்டா கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து வழிபறி செய்த ரவுடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மணிவிளான் 7-ம் வீதியை சேர்ந்த அஸ்லாம் ஷீரீப் (25). இவர் நேற்று அறந்தாங்கி அருகே உள்ள குன்னகுரும்பியில் இருந்து பைக்கில் வந்த போது, அழியாநிலை வாழகுடியிருப்பை சேர்ந்த கூத்தையா (24) என்பவர் சாலையில் பெரிய பட்டாகத்தியை கையில் வைத்து கொண்டு போக்குவரத்துக்கு இடையூறாக அஸ்லாம் ஷீரீபை கொலை செய்து விடுவேன் என கூறி மிரட்டி அவரின் சட்டை பையில் இருந்த 200 ரூபாயை பறித்து உள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் அறந்தாங்கி போலீசார் கூத்தையாவை கைது புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். பட்டாகத்தியை கையில் வைத்து கொண்டு மிரட்டிய சம்பவம் குன்னகுருப்பி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post பட்டா கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த ரவுடி சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Related Stories: