புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு போட்டி

அறந்தாங்கி, அக். 23: மாவட்ட அளவிலான அரசு பள்ளிகளுக்கு இடையில் விளையாட்டு போட்டிகள் புதுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட அளவிலான இந்த விளையாட்டு போட்டியில் அறந்தாங்கி அரசு மாதிரி மேல் நிலைப் பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டியில் 19 பிரிவில் வெற்றி பெற்று மாநில அளவில் நடைபெறும் போட்டியில் விளையாட தகுதி பெற்று உள்ளனர்.வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற மாணர்கள் டிசம்பர் 5ம் தேதி திருச்சியில் நடைபெறும் மாநில அளவிளான போட்டியில் விளையாட உள்ளனர். மாவட்ட அளவில் நடைபெற்ற வாலிபால் போட்டியில் வெற்றி மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்ற மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் சேகர், உடற்கல் இயக்குனர் பழனியப்பன் உடற்கல்வி ஆசிரியர் சசிகுமார் பள்ளியின் பெற்றோர்கள் பொதுமக்கள் பாராட்டி உள்ளனர்.

The post புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு போட்டி appeared first on Dinakaran.

Related Stories: