பரமத்தியில் குட்கா விற்றவர் கைது

 

க.பரமத்தி, அக். 22: தடைசெய்யப்பட்ட பொருள்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர். க.பரமத்தி பகுதியில் இருந்து நொய்யல் சாலையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள கஞ்சா, புகையிலை பொருட்களான போன்ற புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து க.பரமத்தி எஸ்ஐ சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில், தடை செய்யப்பட்டுள்ள கஞ்சா பொருட்கள் 100கிராம் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டு, விற்பனை செய்த க.பரமத்தி அருகே மோளபாளையம் சக்திவேல் மகன் லோகேஷ்(22)மீது வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post பரமத்தியில் குட்கா விற்றவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: