காங்கயம் சட்ட மன்ற தொகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளர் கூட்டம்

காங்கயம், அக்.22:காங்கயம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் காங்கேயம் சென்னிமலை ரோடு தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.இதில் காங்கயம் சட்ட மன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளரும்,மாநில தொழிலாளர் அணி துணை செயலாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் வாக்குச்சாவடியில் மகவர்களை சந்தித்து அரசின் திட்டங்கள் மக்களிடம் எடுத்துச் சொல்வது தொகுதியில் செய்யப்பட்ட பணிகள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்,நீக்குதல், புதிய உறுப்பினர்களை கட்சிக்கு சேர்த்தல் உள்பட பல்வேறு அறிவுரைகளை வழங்கினர்.

இதில் காங்கயம் நகரச் செயலாளர் சேமலையப்பன் காங்கயம் ஒன்றிய செயலாளர்கள் சிவானந்தன்,கருணை பிரகாஷ், வெள்ளகோவில் நகர செயலாளர் முருகானந்தம், ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன்,குண்டடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார்,சென்னிமலை ஒன்றிய செயலாளர் பிரபு,தமிழ்செல்வன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post காங்கயம் சட்ட மன்ற தொகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: