ஆந்திராவில் மர்மமான முறையில் 2 சிறுத்தைகள் உயிரிழப்பு

திருப்பதி: சித்தூர் மாவட்டம் யாடமாரி மண்டலம் தல்லமடுகு வனப்பகுதியில் நேற்று சிறுத்தை சந்தேகத்திற்கிடமான நிலையில் இறந்து கிடந்தது. இது குறித்து தகவல் இருந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த டிஎப்ஓ பரணி, யாடமாரி எஸ்.எஸ்.ஈஸ்வர் ஆகியோர் சிறுத்தை இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அதில் மர்மமான முறையில் வெட்டப்பட்டு உள்ளது என்றும், புலியின் நகங்களை வேட்டையாடுபவர்கள் வெட்டி எடுத்துச் சென்று இருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

இதுகுறித்து முழு விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல் சித்தூர் மாவட்டம் சோமலா மண்டல் அவுலபள்ளி பஞ்சாயத்து குளத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் சிறுத்தை இறந்து கிடந்தது. ஒரே நாளில் மாவட்டத்தில் இரண்டு இடங்களில் சிறுத்தை மர்ம முறையில் இறந்து கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ஆந்திராவில் மர்மமான முறையில் 2 சிறுத்தைகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: