நாகர்கோவிலில் திராவிடர் கழகக் கொடியேற்று விழா

 

நாகர்கோவில், அக்.21: குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக திராவிடர் கழகக் கொடியேற்று விழா நாகர்கோவில் ஒழுகினசேரியில் திராவிடர்கழக மாவட்டத் தலைவர் சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட திராவிடர் கழக செயலாளர் வெற்றிவேந்தன் முன்னிலை வகித்தார். திராவிடர் கழக மாவட்ட இளைஞரணி செயலாளர் அலெக்சாண்டர் திக கொடியினை ஏற்றிவைத்தார்.

பொதுக்குழு உறுப்பினர் தயாளன் மாவட்ட துணைத் தலைவர் நல்ல பெருமாள், திமுக தொழிற்சங்க பொறுப்பாளர் இளங்கோ, திராவிடர் கழக காப்பாளர் பிரான்சிஸ், திராவிடர்கழக கலை இலக்கிய அணி மாவட்ட செயலாளர் பொன்னுராசன், மாவட்ட துணைச் செயலாளர் ஐசக் நியூட்டன், மாநகர தலைவர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் குமாரதாஸ், ஆறுமுகம், தமிழ் அரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post நாகர்கோவிலில் திராவிடர் கழகக் கொடியேற்று விழா appeared first on Dinakaran.

Related Stories: