மதுபாட்டில் விற்றவர் கைது

 

பண்ருட்டி, அக். 21: காடாம்புலியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார், பெரியபுறங்கணி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெரியபுறங்கணி பஸ் ஸ்டாப் அருகில் அதே பகுதியை சேர்ந்த ஞானசேகரன் (46) என்பவர் திருட்டுத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து புதுவை மாநில மது பாட்டில்களை பறிமுதல் செய்து, அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post மதுபாட்டில் விற்றவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: