செல்போன்கள் திருடிய வாலிபர் கைது

 

சிதம்பரம், அக். 21:பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பெண்ணகோணம் மேற்கு குருவை சேர்ந்தவர் பழனிமுத்து மகன் செந்தமிழ்வளவன். இவர் தனது நண்பர்களுடன் தன்னுடைய செல்போனுக்கு டெம்பர் கிளாஸ் ஒட்டுவதற்காக, 6 செல்போன்களை எடுத்துக்கண்டு சிதம்பரம் அடுத்துள்ள அண்ணாமலை நகர், ஓபி மெயின் ரோடு பஸ் நிறுத்தம் அருகே உள்ள கடையில் வைத்துவிட்டு ஆட்டோவை கூப்பிட சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது செல்போனைகளை காணவில்லை.

இது குறித்து அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் செந்தமிழ்வளவன் புகார் செய்தார். புகாரின் பேரில் அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் நரியம்பட்டு, சங்கராபுரம் பகுதியை சேர்ந்த காலியப்பன் மகன் கணேஷ் என்கிற பிரபு (35)என்பவர் செல்போனைகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து கணேஷ் என்கிற பிரபுவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post செல்போன்கள் திருடிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: