கோவையில் வெவ்வேறு சம்பவம் டெக்ஸ்டைல் அதிபர், இளம்பெண் தற்கொலை

 

கோவை, அக். 21: கோவையில் வெவ்வேறு சம்பவத்தில் டெக்ஸ்டைல் அதிபர், இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை சிங்காநல்லூர், அருகே உள்ள ராவத்தூர் வைக்கம் கார்டனை சேர்ந்தவர் வினோத்குமார் (33). டெக்ஸ்டைல் அதிபர். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மனவேதனை அடைந்த வினோத்குமார் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவைப்புதூர் சரவணா நகரை சேர்ந்தவர் சிவமுருகன். இவரது மனைவி ராஜலட்சுமி (21). இவர்களுக்கு 3 மாத கைக்குழந்தை உள்ளது. இந்நிலையில் ராஜ லட்சுமி அடிக்கடி ஆன்லைனில் பொருட்கள் வாங்கியுள்ளார். இதனை இவரது தாய் கனி கண்டித்துள்ளார். இதனால் விரக்தியடைந்த ராஜலட்சுமி நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கோவையில் வெவ்வேறு சம்பவம் டெக்ஸ்டைல் அதிபர், இளம்பெண் தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: