பைக் மீது சரக்கு வாகனம் மோதல்: வாலிபர் பரிதாப பலி

 

மேட்டுப்பாளையம்,அக்.21: மேட்டுப்பாளையம் – சிறுமுகை சாலையில் உள்ள மதினா நகரை சேர்ந்தவர் மன்சூர்(32). மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் வாகன உதிரிபாக கடையில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று விடுமுறை என்பதால் மன்சூர் வீட்டில் இருந்து தனது பைக்கில் கல்லாறு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தார். ஊட்டி தலைகுந்தா காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த கேசவன்(28) என்பவர் சரக்கு வாகனத்தில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி நோக்கி சென்றுள்ளார்.

ஊட்டி சாலையில் கல்லாறு அருகே சரக்கு வாகனம் மன்சூர் ஓட்டிய பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மன்சூரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்தில் உயிரிழந்த மன்சூருக்கு சபானா பர்வீன்(30)என்ற மனைவியும்,ஒரு மகனும்,ஒரு மகளும் உள்ளனர்.

The post பைக் மீது சரக்கு வாகனம் மோதல்: வாலிபர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Related Stories: