தஞ்சையில் சாலை விபத்தில் உயிரிழந்த எஸ்.ஐ குடும்பத்திற்கு ரூ.25 லட்சம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் அறிக்கை: தஞ்சாவூர் மாவட்ட தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய செந்தில்குமார் (49) நேற்று தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவிட்டு திரும்பும் வழியில் லாரி மோதி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும்.

The post தஞ்சையில் சாலை விபத்தில் உயிரிழந்த எஸ்.ஐ குடும்பத்திற்கு ரூ.25 லட்சம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: