ஈஷா மையம் மீதான புகார்களை முழுமையாக விசாரிக்க இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: ஈஷா அறக்கட்டளை ஆசிரமம், பழங்குடி மக்கள் மற்றும் ஆதிவாசிகள் நிலங்களையும், அரசின் நிலங்களையும் ஆக்கிரமித்துள்ள புகார்கள் மீது அரசு தரப்பில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பதற்கு விடை அளிக்க வேண்டும்.

ஈஷா அறக்கட்டளை ஆசிரமத்தின் மீதான குற்றவியல் மற்றும் உரிமையியல் புகார்களை முழுமையாக விசாரித்து, உண்மை நிலவரத்தை தெரிவிக்க வேண்டும். குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடாமல் தண்டிக்கப்பட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டு கொள்ளப்படுகிறது.

The post ஈஷா மையம் மீதான புகார்களை முழுமையாக விசாரிக்க இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: