இதை எதிர்த்து பொது தீட்சிதர்கள் குழுவின் செயலாளர் வெங்கடேச தீட்சிதர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், பொது தீட்சிதர் குழுவின் முடிவில் தலையிட இந்து அறநிலையத்துறைக்கு அதிகாரம் இல்லை. எனவே, இணை ஆணையரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்ர். இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நடராஜ தீட்சிதர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் கோயில் தங்களுக்கு சொந்தமானது என்று பொது தீட்சிதர்கள் நினைப்பதாகவும் நீதிமன்றம் தான் இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்றார். இதனையடுத்து, மன கஷ்டங்களுக்காக கோயிலுக்கு வரும் பக்தர்கள் அங்கும் அவமானப்படுத்தப்படுகிறார்கள். சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வருபவர்கள் எல்லோரும் சண்டைக்கு வருவது போலவே தீட்சிதர்கள் நினைக்கிறார்கள். சிதம்பரம் நடராஜர் கோயில் நமக்கு சொந்தமானது என்று பொது தீட்சிதர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் தங்களை கடவுளுக்கு மேலானவர்கள் என்று கருதுகிறார்கள்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த ஆரூத்ரா தரிசனம் தற்போது பல கோயில்களில் நடத்தப்படுகிறது. சிதம்பரம் கோயில் ஆருத்ரா தரிசனத்திற்கு முன்பை போல பக்தகர்கள் கூட்டம் வருவதில்லை. இப்படியே இருந்தால் பக்தர்களுடைய வருகை குறைந்து கோயிலுக்கு யாருமே வராத நிலை ஏற்படும். கோயிலில் காசு போட்டால்தான் பூ கிடைக்கும். இல்லையென்றால் விபூதி கூட கிடைக்காது என்று கருத்து தெரிவித்தார். இதனையடுத்து, இந்த வழக்கில் பதிலளிக்குமாறு இந்து அறநிலையத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை வரும் திங்கட்கிழமை தள்ளிவைத்தார்.
The post சிதம்பரம் கோயில் பொது தீட்சிதர்கள் கடவுளுக்கும் மேலானவர் என தங்களை நினைக்கிறார்கள்: ஐகோர்ட் கருத்து appeared first on Dinakaran.