விவாகரத்து கோரிய வழக்கு தனுஷ், ஐஸ்வர்யா ஆஜராகாததால் விசாரணை தள்ளிவைப்பு

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா், நடிகர் தனுஷ் இருவரும் டிவிட்டரில் தாங்கள் பிரிந்து விட்டதாக பதிவிட்டனர். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இடையே உள்ள பிரச்னையை தீர்க்க அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்தனர். இந்நிலையில் இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் வகையில் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அதில் 2004ம் ஆண்டு நடந்த தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர். இந்த மனு முதன்மை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுபாதேவி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் ஆஜராகவில்லை, இதையடுத்து வழக்கின் விசாரணையை நவம்பர் 2ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

The post விவாகரத்து கோரிய வழக்கு தனுஷ், ஐஸ்வர்யா ஆஜராகாததால் விசாரணை தள்ளிவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: