தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் சென்னை உள்பட 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் சென்னை உள்பட 21 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்தெரிவித்துள்ளது. திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர் மற்றும் புதுச்சேரியில் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் சென்னை உள்பட 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: