கொலை முயற்சி வழக்கில் பெண் உள்பட இருவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

தூத்துக்குடி, அக். 19: கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய பெண் உள்பட இருவருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சாயர்புரம் பெரும்படை சாஸ்தா கோயில் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (50). இவரை கடந்த 3.4.2021 அன்று முன்விரோதம் காரணமாக சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வைத்து வெட்டிக் கொல்ல முயற்சி நடந்தது. இதுதொடர்பாக ஏரல் புதுமனை பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து (45), சாயர்புரம் பெரும்படை சாஸ்தா கோயில் பகுதியை சேர்ந்த சங்கரநாராயணன் மனைவி பார்வதி (40) ஆகியோரை சாயர்புரம் போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கின் விசாரணை, தூத்துக்குடி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி வஷித்குமார் விசாரித்து இசக்கிமுத்து, பார்வதி ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

The post கொலை முயற்சி வழக்கில் பெண் உள்பட இருவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை appeared first on Dinakaran.

Related Stories: