சென்னையில் கனமழை பாதிப்பு பகுதிகளை 3ஆவது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..!!

சென்னை: சென்னையில் கனமழை பாதிப்பு பகுதிகளை 3ஆவது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். கொளத்தூர் தொகுதியில் வீனஸ் நகர், ரெட்டேரி, பாலாஜி நகர், தணிகாசலம் நகரில் முதலமைச்சர் ஆய்வு செய்து வருகிறார். மழைக்காலத்தில் பணியில் இருந்த தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். சென்னையில் மழைக்கால மருத்துவ முகாம்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் வழங்குகிறார்.

 

The post சென்னையில் கனமழை பாதிப்பு பகுதிகளை 3ஆவது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..!! appeared first on Dinakaran.

Related Stories: