பள்ளியில் பெயர்ந்து விழுந்த மேற்கூரை: மாணவர் படுகாயம்

கமுதி: கமுதி அருகே, அரசுப் பள்ளியில் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் 6ம் வகுப்பு மாணவர் படுகாயமடைந்தார். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே, வீரமாச்சான்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 260 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று மாலை 4 மணியளவில் பள்ளி முடிந்து மாணவர்கள் வெறியேறிக்கொண்டிருந்தனர்.

அப்போது, 6வது வகுப்பறையில் திடீரென மேற்கூரை காரை பெயர்ந்து இருக்கைகள் மீது விழுந்தன. இதில், மாணவன் மணிவேல் (11) தலையில் படுகாயமடைந்தார். மற்ற மாணவர்கள் காயமின்றி தப்பினர். உடனடியாக அந்த மாணவன் 108 ஆம்புலன்ஸ் மூலம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.

The post பள்ளியில் பெயர்ந்து விழுந்த மேற்கூரை: மாணவர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: