சென்னை மண்டலங்களைச் சேர்ந்த திருக்கோயில்கள் சார்பில் இன்று காலை முதல் உணவு பொட்டலங்கள் தயாரித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில், கந்தக்கோட்டம் அருள்மிகு முத்துக்குமார சுவாமி திருக்கோயில் சென்னை, வடபழனி, அருள்மிகு ஆண்டவர் திருக்கோயில், மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில், திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில், வில்லிவாக்கம் அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், பாடி. அருள்மிகு திருவாலீஸ்வரர் திருக்கோயில், கோயம்பேடு அருள்மிகு குறுங்காலீஸ்வரர் திருக்கோயில், அமைந்தக்கரை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், திருவான்மியூர் அருள்மிகு பாம்பன் சுவாமிகள் திருக்கோயில்
வேளச்சேரி அருள்மிகு தண்டீஸ்வரர் திருக்கோயில், சைதாப்பேட்டை அருள்மிகு காரணிஸ்வரர் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்கள் சார்பில் இன்று காலை 5,000க்கும் மேற்பட்ட உணவு பொட்டலங்கள் தயார் செய்யப்பட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டன. இப்பணிகளை சம்பந்தப்பட்ட திருக்கோயில்களின் இணை ஆணையர்கள். செயல் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
The post சென்னை கனமழை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருக்கோயில்கள் சார்பில் 5000க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்கள் விநியோகம் appeared first on Dinakaran.