மீன் தொட்டியில் விழுந்து ஒரு வயது குழந்தை பலி வேலூரில் சோகம்

வேலூர், அக். 8: வேலூரில் மீன் தொட்டியில் விழுந்து ஒரு வயது குழந்தை பரிதமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் விருபாட்சிபுரம் குட்டை மேட்டு தெருவை சேர்ந்தவர் குலாம்ரசூல், மீன் வியாபாரி. இவருக்கு 2 மகள்களும், முகமதுரியான் என்ற ஒரு வயது ஆண் குழந்தையும் இருந்தது. நேற்றுமுன்தினம் இரவு 9 மணி அளவில் முகமதுரியான் தனது சகோதரிகளுடன் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். இதனால் குலாம்ரசூல் தனது வீட்டு கழிவறையில் மீன் தொட்டியில் தண்ணீர் நிரப்பி வைத்து இருந்தார். வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த முகமதுரியான் திடீரென எதிர்பாராதவிதமாக தண்ணீர் நிரப்பி வைத்திருந்த மீன் தொட்டியில் விழுந்துள்ளான். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த முகமதுரியானின் சகோதரிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து முகமதுரியானை மீட்டு பாகாயத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீன் தொட்டியில் தவறி விழுந்து ஒரு வயது குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post மீன் தொட்டியில் விழுந்து ஒரு வயது குழந்தை பலி வேலூரில் சோகம் appeared first on Dinakaran.

Related Stories: