திருமங்கலம், மார்ச் 16: திருமங்கலம் அருகேயுள்ள பெரிய பொக்கம்பட்டியை சேர்ந்தவர் சேகர். ரெட்டியபட்டியிலுள்ள பெத்தனசாமி கோயில் நிர்வாகியான இவர். நேற்று முன்தினம் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்திவிட்டு திரும்பினார். இந்தநிலையில் நேற்று காலை கோயில் உண்டியலில் இருந்த பணம் ரூ.5 ஆயிரம், 25 மணிகள் மற்றும் குத்துவிளக்குகள் உள்ளிட்டவை திருடுபோனது தெரியவந்தது. இது குறித்து சேகர் கொடுத்த புகாரில் சிந்துபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.
