ரூ.26 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

 

சிவகாசி, அக்.16: சிவகாசி அருகே பாலித்தீன் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.26 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. சிவகாசி அருகே மாரனேரி மெயின் ரோட்டில் துலுக்கப்பட்டியில் சிவகாசி கட்டளைப்பட்டி ரோடு முனீஸ்நகரை சேர்ந்தவர் ஆனந்தகுமார்(29). இவருக்கு சொந்தமான பாலித்தீன் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த நிறுவனத்தின் மீது மின்னல் தாக்கியதில் ஆலையில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது.

இந்த நிலையில் ஆலையின் உரிமையாளர் ஆனந்தகுமார் மாரனேரி போலீசில் கொடுத்த புகாரில் பாலித்தீன் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் இருந்த சுமார் ரூ.26 லட்சத்து 45 ஆயிரம் மதிப்புள்ள மூலப்பொருட்கள் எரிந்து நாசமானது என்று தெரிவித்து இருந்தார்.  இந்த புகார் குறித்து மாரனேரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post ரூ.26 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம் appeared first on Dinakaran.

Related Stories: