பள்ளி முடியும் நேரத்தில் விடுமுறை அறிவித்த கிருஷ்ணகிரி கலெக்டர்; மழையில் நனைந்தபடி வீடுகளுக்கு செல்லும் குழந்தைகள்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்தது . இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என பெற்றோர் எதிர்பார்த்தனர் . ஆனால் மாவட்ட கலெக்டர் மாவட்ட கல்வித்துறையும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை .

இதனால் பள்ளி மாணவ மாணவிகள் நனைந்தபடி இன்று பள்ளிகளுக்கு சென்றனர். இந்த நிலையில் இன்று மதியம் 2 மணி 7 நிமிட அளவில் மாவட்ட கலெக்டர் கூறியதாக செய்தி மக்கள் தொடர் அலுவலர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

அதில் கனமழை பெய்து வருவதால் அரை நாள் மட்டும் பள்ளிகள் செயல்படும் என அறிவித்தார் . 3.30 மணியளவில் அனைத்து பள்ளிகளும் முடிவடையும் நேரத்தில் மதியம் 2 மணி 7 நிமிடங்களில் கலெக்டர் விடுமுறை அறிவித்தது பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது .

இதனால் மாணவ மாணவிகள் பலரும் மழையில் நனைந்தபடி வீடுகளுக்கு சென்றனர் . நேற்று பெய்த மழையில் பல மாணவ மாணவிகள் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது . ஆனால் மாவட்ட கலெக்டரின் இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது .

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு என்று பெற்றோர்கள் முணுமுணுத்துக் கொண்டனர்

The post பள்ளி முடியும் நேரத்தில் விடுமுறை அறிவித்த கிருஷ்ணகிரி கலெக்டர்; மழையில் நனைந்தபடி வீடுகளுக்கு செல்லும் குழந்தைகள் appeared first on Dinakaran.

Related Stories: