மாங்காடு அருகே கால்வாய் பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்தது: உயிர் தப்பிய பெண்கள்

குன்றத்தூர்: சென்னை புறநகர் பகுதிகளான மாங்காடு, குன்றத்தூர் உள்பட பல்வேறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்தது. இந்நிலையில், மாங்காடு அருகே பரணிபுத்தூர், வசந்தபுரி நகர் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் வெளியூர் செல்வதற்காக, வீட்டில் அருகில் இருந்த ஒரு ஆட்டோவில் ஏறி அய்யப்பன்தாங்கல் பேருந்து நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தனர். முன்னதாக, பரணிபுத்தூரில் இருந்து அய்யப்பன்தாங்கல் செல்லும் சாலையோரத்தில், புதிதாக மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. அவ்வழியே பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, கால்வாய் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் ஆட்டோ உருண்டு கவிழ்ந்தது.

இவ்விபத்தில், ஆட்டோவில் பயணம் செய்த 2 பெண்கள், ஒரு குழந்தை மற்றும் ஆட்டோ டிரைவர் உள்பட 4 பேர் கவிழ்ந்த ஆட்டோவில் சிக்கிக் கொண்டு அலறி சத்தம் போட்டனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, ஆட்டோவில் சிக்கியிருந்த டிரைவர் உள்பட பயணிகளை பத்திரமாக மீட்டனர். இதில், ஆட்டோ டிரைவர் உள்பட 4 பயணிகளும் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் மாங்காடு போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். விசாரணையில், சென்னை புறநகர் பகுதிகளில் நேற்றிரவு தொடர் கனமழை பெய்ததால், சாலை சரிவர தெரியாமல், கால்வாய்க்காக தோண்டப்பட்ட ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாகத் தெரியவந்தது. இதுகுறித்து ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

The post மாங்காடு அருகே கால்வாய் பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்தது: உயிர் தப்பிய பெண்கள் appeared first on Dinakaran.

Related Stories: