லாரி மீது கார் மோதி நாளிதழ் உரிமையாளர் பலி: முதல்வர் இரங்கல்


கோவில்பட்டி: மதுரையிலிருந்து வெளியாகும் ஒரு நாளிதழின் செய்தி ஆசிரியர் திருநாவுக்கரசு நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். அவரது இறுதிச்சடங்கு குமரி மாவட்டம் தோவாளையில் நடந்தது. இதில் பங்கேற்ற நாளிதழ் உரிமையாளரான மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த மணிமாறன் (65), அவரது மகன் ரமேஷ்குமார்(45) இருவரும் மாலையில் மதுரைக்கு திரும்பி கொண்டிருந்தனர். காரை மகேஷ்குமார் ஓட்டினார்.

நாலாட்டின்புதூர் மேம்பாலத்தை கடந்து சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை தடுப்பில் மோதி, கன்டெய்னர் லாரி மீது மோதியது. இதில் மணிமாறன் உயிரிழந்தார். ரமேஷ்குமார், லாரி டிரைவர் அசோக்குமார் படுகாயமடைந்தனர். மணிமாறன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

The post லாரி மீது கார் மோதி நாளிதழ் உரிமையாளர் பலி: முதல்வர் இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: