தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் ஒரே வாரத்தில் 2 குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த தாய், காதலனுடன் கைது: மயான காவலாளியால் பிடிபட்டனர்

ராம்நகர்: தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால், 2 குழந்தைகளை கொடூரமாக கொன்ற தாய், காதலனுடன், மயான காவலாளி போலீசில் பிடித்து கொடுத்தார். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெங்களூரு டேனரி சாலை, ஏகே காலனியை சேர்ந்தவர் சிவன். மாநகராட்சி குடிமைத் தொழிலாளி. இவருக்கும், ஸ்வீட்டி (24) என்பவருக்கும், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கபிலா (2) என்ற மகளும், 11 மாதத்தில் கபிலன் என்ற ஆண் குழந்தையும் பிறந்தது.

சிவன், வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த ஸ்வீட்டிக்கு கால் சென்டர் ஊழியரான ராம்நகரை சேர்ந்த கிரிகோரி பிரான்சிஸ் (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது தாகத உறவாக மாறியது. இந்த விஷயம் சிவனுக்கு தெரிந்தவுடன், மனைவியை கண்டித்துள்ளார். இதையொட்டி அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ஸ்வீட்டி, கடந்த செப்டம்பர் 15ம் தேதி கணவர் வேலைக்குச் சென்றபோது, ​​குழந்தைகளை அழைத்துக் கொண்டு காதலனுடன் ராமநகருக்கு சென்றார்.

மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பிய சிவன், மனைவி மற்றும் குழந்தைகளை காணாமல் திடுக்கிட்டார். அவர்களை, பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் இல்லை. இதுகுறித்து கிராமிய போலீசில், செப்டம்பர் 17ம் தேதி புகார் அளித்தார். இந்நிலையில், கடந்த 1ம் தேதி ஆணும், பெண்ணும் சிறுமியின் சடலத்துடன், ராமநகரில் உள்ள ஏபிஎம்சி அருகே உள்ள மயானத்துக்கு சென்றனர். அங்கிருந்த காவலாளியிடம், உடல் நலக்குறைவால் குழந்தை இறந்துவிட்டதாக கூறி, சடலத்தை அடக்கம் செய்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த காவலாளி, சடலத்துடன் 2 பேரையும் தனது செல்போனில் படம் பிடித்து கொண்டார்.

இதைதொடர்ந்து, கடந்த 11ம் தேதி, அவர்கள் 2 பேரும், 11 மாத ஆண் குழந்தை சடலத்துடன் மீண்டும் மயானத்துக்கு வந்தனர். அப்போது, அதேபோல் உடல் நலக்குறைவால் குழந்தை இறந்துவிட்டது. நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை அறுவை சிகிச்சை செய்தும் உயிர் பிழைக்கவில்லை என தெரிவித்தனர். தொடர்ந்து, முதல் குழந்தை புதைக்கப்பட்ட இடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது. சடலத்தை அடக்கம் செய்து, இறுதி சடங்குககளை முடித்தனர். இதற்கிடையில், சந்தேகமடைந்த காவலாளி, அவர்களை மீண்டும் தனது செல்போனில் படம் பிடித்து வைத்து கொண்டு, போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் போலீசார், இருவரையும் பிடித்து விசாரித்தனர். அதில், ஸ்வீட்டி வேலை செய்யும் வீடுகளுக்கு அருகே பிரான்சிஸ் தினமும் நடந்து சென்று கொண்டிருந்தார். இதில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் ஏற்பட்டு, சில நாட்களில் தகாத உறவாக மாறியது. ஸ்வீட்டிக்கு 2 குழந்தைகள் இருப்பதை பிரான்சிஸ் அறிந்திருந்தார். ஆனாலும், அவர்கள் அடிக்கடி சந்தித்து, 6 மாதங்களாக தகாத உறவில் ஈடுபட்டனர்.

இதைதொடர்ந்து, கடந்த ஜூலை மாதம் குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறிய அவர், காதலனுடன் ராம்நகர் வீட்டில் தங்கினார். அந்த நேரத்தில், அவர்களது தகாத உறவுக்கு இடையூறாக குழந்தைகள் இருப்பதால், குழந்தைகள் தூங்கும்போது முகத்தில் தலையணையை வைத்து அழுத்து 2 பேரும் கொலை செய்தனர் என வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. இதைதொடர்ந்து அவர்களை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார், 2 குழந்தைகளின் உடல்களையும் தோண்டி எடுத்து, பிரேதப் பரிசோதனை நடத்தப்படும் என தெரிவித்தனர்.

The post தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் ஒரே வாரத்தில் 2 குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த தாய், காதலனுடன் கைது: மயான காவலாளியால் பிடிபட்டனர் appeared first on Dinakaran.

Related Stories: