நித்திரவிளை அருகே முதியவரை தாக்கிய வாலிபர் கைது

நித்திரவிளை, அக். 15: நித்திரவிளை அருகே சரல்முக்கு அஞ்சாம்பிலாவு பகுதியை சேர்ந்தவர் நேசமணி (85). இவர் நேற்று முன்தினம் மாலை சரல்முக்கு பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்று டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சஜின் (29) என்ற கொத்தனார் அந்த பகுதிக்கு குடிபோதையில் வந்துள்ளார். பின்னர் நேசமணியை பார்த்து வயசானா வீட்டில் இருக்க மாட்டியா என்று கேட்டு, தென்னை மட்டையால் நேசமணியை தாக்கி உள்ளார். இதை பார்த்த பொதுமக்கள் சஜினை எச்சரித்து நேசமணியை காப்பாற்றியுள்ளனர். தாக்குதலில் காயம் அடைந்த முதியவர் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக நேசமணியின் மகன் றாபி (42) நித்திரவிளை போலீசில் புகார் செய்தார். இது சம்பந்தமாக ஏட்டு ஜாண் பென்சிங் வழக்கு பதிவு செய்தார். தொடர்ந்து இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் சஜினை கைது செய்து விசாரித்து வருகிறார்.

The post நித்திரவிளை அருகே முதியவரை தாக்கிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: