போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஆத்தூர் சுங்கச்சாவடியில் இலவச வாகன அனுமதி

 

மதுராந்தகம், அக்.14: ஆத்தூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த இலவசமான வாகனங்கள் அனுமதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியில் ஆயுத பூஜை, விஜயதசமி வார விடுமுறை என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறைக்கு தென் மாவட்டங்களுக்கு சென்னையில் இருந்து அதிகப்படியான வாகனங்கள் சென்றன.

இந்தநிலையில் நேற்று மாலை தென் மாவட்டங்களில் இருந்து அதிகப்படியான வாகனங்கள் சென்னைக்கு மீண்டும் படையெடுத்ததால் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசல் ஏற்படும்போதெல்லாம் நெரிசலை குறைப்பதற்காக மதுராந்தகம் டிஎஸ்பி மேகலா மற்றும் காவல்துறையினர் சுங்கச்சாவடியில் இலவசமாக வாகனங்களை அனுப்பி வைக்கின்றனர். அதன்படி நேற்று வாகனங்கள் இலவசமாக அனுப்பி வைக்கப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் காணப்பட்டது.

The post போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஆத்தூர் சுங்கச்சாவடியில் இலவச வாகன அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: