தமிழகத்தை வஞ்சிப்பதை கைவிட்டு உரிய நிதியை ஒதுக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: பாஜ தனது பத்தாண்டு கால ஆட்சியில் தனது கட்சி ஆட்சி நடைபெறும் மாநிலங்களுக்கு ஒரு நீதியும் எதிர்க்கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களுக்கு அநீதியும் இழைத்து வந்தது.அதனால் தான் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் பாஜவிற்கு அருதிப்பெரும்பான்மை அளிக்கவில்லை. தோல்விக்கு பின்னரும் தனது வெறுப்பு அரசியலை பாஜ கைவிடவில்லை என்பதனை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டியுள்ளது. மாநிலங்களுக்கு வரி பகிர்வு விடுவிப்பில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் போக்குடன் குறைந்த நிதி ஒதுக்கியிருப்பது கண்டனத்திற்குரியது. ஒரு கண்ணில் வெண்ணையும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கின்ற கொடிய நடைமுறையை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். தமிழகத்திற்கு ரூ.7268 கோடி நிதி ஒதுக்கியிருப்பது உ.பி. உள்ளிட்ட பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவான நிதியாகும். தமிழகத்தை வஞ்சிக்கும் போக்கை கைவிட்டு, தமிழ்நாட்டிற்குரிய நிதியினை வழங்க வேண்டும்.

The post தமிழகத்தை வஞ்சிப்பதை கைவிட்டு உரிய நிதியை ஒதுக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு முத்தரசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: