ஆட்டோ திருடிய கட்டுமான தொழிலாளி கைது

 

தாராபுரம், அக்.11: தாராபுரம் வடக்கு கச்சேரி வீதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் தனக்கு சொந்தமான ஆட்டோவை கடந்த 26ம் தேதி வீட்டின் முன் நிறுத்தி விட்டு தூங்க சென்றார். காலையில் பார்த்த போது ஆட்டோவை யாரோ திருடிச் சென்றதை அறிந்து தாராபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் நேற்று தாராபுரம்- கரூர் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக சந்தேகப்படும்படி ஆட்டோவில் வந்தவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் மதுரை வரிச்சியூர் பகுதியை சேர்ந்த ராஜா(33) என்பதும், பிரபாகரனின் ஆட்டோவை திருடியது அவர் தான் என்பதும் தெரிய வந்தது. மேலும் ஆட்டோவை திருடி விற்பதற்காக திருப்பூருக்கு கொண்டு செல்வதாகவும், தாராபுரத்தில் கொத்தனார் வேலைக்கு வந்த போது ஆட்டோ தனியாக நிற்பதை கண்காணித்து அதை திருடி சென்றதை அவரே ஒப்புக்கொண்டார். ராஜாவை கைது செய்த போலீார் ஆட்டோவை பறிமுதல் செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தாராபுரம் சிறையில் அடைத்தனர்.

The post ஆட்டோ திருடிய கட்டுமான தொழிலாளி கைது appeared first on Dinakaran.

Related Stories: