பாலியல் புகார் வழக்குப்பதிந்துள்ளதாக கூறி புதுவை நபரிடம் ₹11.65 லட்சம் மோசடி

புதுச்சேரி, அக். 11: பாலியல் புகார் வழக்குப்பதிந்துள்ளதாக கூறிய மோசடி கும்பலிடம் புதுவை நபர் ரூ.11.65 லட்சத்தை ஏமாந்துள்ளார். புதுச்சேரி சண்முகாபுரம் பகுதியை சேர்ந்த முருகவேல். இவரை மர்ம நபர் தொலைபேசியில் தொடர்புகொண்டு சிபிஐ அதிகாரி பேசுவதாக கூறியுள்ளார். அப்போது தங்கள் மகன் மீது கூட்டு பாலியல் வழக்கு மும்பை தானேவில் உள்ள காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தங்கள் மகன் மீது எந்த வழக்கும் இல்லாமல் விடுவிக்க வேண்டும் என்றால் தங்களின் வங்கி கணக்குக்கு பணம் அனுப்புமாறு கூறியுள்ளார். இதைநம்பி முருகவேல், மர்ம நபருக்கு ரூ.11.65 லட்சத்தை அனுப்பியுள்ளார். அதன்பிறகு தனது மகனிடம் விசாரித்தபோது அவர் மோசடி கும்பலிடம் ஏமாந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து முருகவேல் இச்சம்பவம் குறித்து புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பாலியல் புகார் வழக்குப்பதிந்துள்ளதாக கூறி புதுவை நபரிடம் ₹11.65 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Related Stories: