பேரவை கூட்டம்

காரைக்குடி, ஏப்.3: காரைக்குடி தொழில் வணிகக்கழகத்தின் சிறப்பு பேரவை கூட்டம் நடந்தது. செயலாளர் கண்ணப்பன் வரவேற்றார். தலைவர் சாமி திராவிட மணி தலைமை வகித்தார். பொருளாளர் சரவணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், புதிய தலைவராக கண்ணப்பன், செயலாளராக சரவணன், பொருளாளராக சையது ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பெரியணன், காசிவிசுவநாதன், ராகவன், சித்திரைவேலு, சிறப்பு ஆலோசகராக சாமிதிராவிடமணி, துணைத் தலைவர்களாக சத்தியமூர்த்தி, கந்தசாமி, ராமநாதன், நாகநாதன், கருப்பையா, இணைச் செயலாளர்களாக ராகவன், வேணுகோபால், லியாக்கத்அலி, முருகேசன், சண்முகநாதன் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். கூட்டத்தில், புதுவயல், கல்லல் பகுதியை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

 

Related Stories: