ஓய்வு ராணுவ வீரர் விபத்தில் பலி

பேரையூர், ஏப். 3: உசிலம்பட்டி அருகே உள்ள மெய்யனம்பட்டியை சேர்ந்த மொக்கமாயன் மகன் மகேந்திரன் (59). ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர், உசிலம்பட்டியிலுள்ள ஒரு வங்கியில் செக்யூரிட்டியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று நண்பரை பார்க்க பேரையூர் வந்த அவர், பின்னர் டூவீலரில் திரும்பி சென்று கொண்டிருந்தார்.

வழியில் சேடபட்டி அருகே தென்காசி மாவட்டம் ஆயக்குடியைச் சேர்ந்த சதீஷ்குமார் ஓட்டி வந்த கார் இவரது டூவீலர் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மகேந்திரன் பேரையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

 

Related Stories: