தமிழ்நாடு முழுவதும் 3 நாட்களுக்கு திமுக கொடி அரைக் கம்பத்தில் பறக்கும் : துரைமுருகன் அறிவிப்பு

சென்னை : தமிழ்நாடு முழுவதும் 3 நாட்களுக்கு திமுக கொடி அரைக் கம்பத்தில் பறக்கும் என பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மருமகனும் அரசியல் மேதை முரசொலி மாறன் அவர்களின் சகோதரரும் தலைசிறந்த எழுத்தாளர், பத்திரிகையாளருமான திரு.முரசொலி செல்வம் அவர்கள் இன்று (10.10.2024) காலை மறைவெய்தினார்.

கழகம் தொடங்கப்பட்ட காலம் தொட்டு கழகத்தின் கொள்கை பரப்பியவரும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவருமான திரு.முரசொலி செல்வம் அவர்களின் மறைவினையொட்டி தமிழகம் முழுவதும் இன்று (10.10.2024) முதல் மூன்று நாட்களுக்கு கழக அமைப்புகள் அனைத்தும் கழகக் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு முழுவதும் 3 நாட்களுக்கு திமுக கொடி அரைக் கம்பத்தில் பறக்கும் : துரைமுருகன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: