நாமக்கல்லில் பரவலாக மழை

நாமக்கல், அக்.10: நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காலையில் வெயில் அடித்த நிலையில், மாலையில் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பெய்த மழையால், நாமகிரிப்பேட்டையில் 50 ஆண்டு பழமையான மரம் முறிந்து சாலையில் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று காலை கடும் வெயில் வாட்டி எடுத்த நிலையில், மாலையில் சாரல் மழை பெய்தது. பின்னர் படிப்படியாக இரவு 10 மணிக்கு கன மழை கொட்டியது. இதில் நாமக்கல் பஸ் நிலையம், சாலைகளில் மழை நீர்பெருக்கெடுத்து சென்றது. வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தவாறு சிரமத்துடன் சென்றனர். இரவில் தொடர்ந்து மழை பெய்தபடி இருந்தது. மழையின் காரணமாக, வெப்பம் தணிந்து இரவில் குளிர்ந்த காற்று வீசியது.

The post நாமக்கல்லில் பரவலாக மழை appeared first on Dinakaran.

Related Stories: