கத்தியை காட்டி மிரட்டி பணம், நகை பறிப்பு

உளுந்தூர்பேட்டை, அக். 9: புதுச்சேரியை சேர்ந்தவர் ராஜகணபதி (54). தொழிலதிபரான இவர் ஒரு காரில் கள்ளக்குறிச்சியில் இருந்து உளுந்தூர்பேட்டை வழியாக புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தார். நேற்று உளுந்தூர்பேட்டை அடுத்த வெள்ளையூர் காப்புக்காடு அருகில் காரை நிறுத்திவிட்டு சிறுநீர் கழிப்பதற்காக இறங்கி உள்ளார். அப்போது அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள் ராஜகணபதி கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து இரண்டு செல்போன்கள் மற்றும் இரண்டு மோதிரம், பணம் உள்ளிட்டவைகளை பறித்துச் சென்றுள்ளனர். இதனால் பதற்றம் அடைந்த ராஜா கணபதி உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

The post கத்தியை காட்டி மிரட்டி பணம், நகை பறிப்பு appeared first on Dinakaran.

Related Stories: