எல்லை பாதுகாப்பு படை மீது வங்கதேச கடத்தல்காரர்கள் தாக்குதல்

புதுடெல்லி: திரிபுராவில் கோகுல்நகர், சல்போகர் பகுதிகளில் இந்திய எல்லையில் நேற்று மாலை சுமார் 12 முதல் 15 கடத்தல்காரர்கள் ஆயுதங்கள் மற்றும் கடத்தல் பொருட்களுடன் நுழைய முயன்றனர். இதனை பார்த்து உஷாரான எல்லைப்பாதுகாப்பு படையினர் விரைந்து செயல்பட்டனர். அவர்களை திரும்பி செல்லும்படி வீரர்கள் எச்சரித்தனர். மேலும் இது தொடர்பாக இதர வீரர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. வீரர்கள் எச்சரித்தபோதிலும் பின்வாங்க மறுத்த கடத்தல்காரர்கள் மேலும் முன்னேற முயன்றதோடு வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். வீரர் ஒருவரை சுற்றி வளைத்த அவர்கள் கூர்மையான ஆயுதங்களால் தாக்குதல் நடத்தினார்கள். அந்த வீரர் துப்பாக்கியால் சுட்டதில் கடத்தல்காரர் ஒருவர் கொல்லப்பட்டார். மற்றவர்கள் தப்பி சென்றனர்.

The post எல்லை பாதுகாப்பு படை மீது வங்கதேச கடத்தல்காரர்கள் தாக்குதல் appeared first on Dinakaran.

Related Stories: