ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் பாஜவுக்கு மக்கள் அளித்த சரியான பதிலடி: ஜவாஹிருல்லா அறிக்கை

சென்னை: ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவு குறித்து மனித நேயமக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை: ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் இந்திய இறையாண்மையின் வெற்றிக்கான அடித்தளமாக அமைந்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு பாஜ ஜனநாயக ரீதியாக மக்கள் வழங்கி இருக்கும் தகுந்த பதிலடி. அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்கும் ஒவ்வொருவரும் எதிர்பார்த்திருந்த முடிவை அம்மாநில மக்கள் உறுதி செய்து இருக்கிறார்கள்.அரியானா மாநிலத்தைப் பொருத்தவரை இந்தியா கூட்டணி ஒருங்கிணைந்து செயல்பட்டு இருக்க வேண்டும். பிளவுவாத அரசியலைத் தவிர்த்து ஒற்றுமையுடன் முன்னேற இந்தத் தேர்தல் முடிவுகள் வழி வகுத்திருக்கின்றன என்றால் அது மிகையல்ல.

The post ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் பாஜவுக்கு மக்கள் அளித்த சரியான பதிலடி: ஜவாஹிருல்லா அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: