*மரணமடைந்த குடும்பங்களுக்கு காங்கிரஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.
*இனி வரு காலங்களில் பொது நிகழ்ச்சியில் துயரங்கள் ஏற்படாமல் தமிழ்நாடு அரசு பார்த்து கொள்ள வேண்டும்.
* இந்திய விமானப் படை கடந்த காலங்களில் மாலை நேரத்தில் விமான சாகச நிகழ்வை நடத்தியது. ஆனால், இப்போது 11 முதல் 1 மணி வரையிலான உச்சி வெயிலில் மக்களை திரட்டி வான் சாகசங்களை நிகழ்த்த வேண்டிய அவசியம் என்ன?
*பறிபோன ஐந்து உயிர்களும் விலைமதிக்க முடியாதவை.
*வான் சாகச நிகழ்ச்சியில் 5 பேர் பலியானதை நியாயப்படுத்த முடியாது.
*விமானப்படைக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளது. அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது.
*15 லட்சம் பேர் ஒரே இடத்தில் திரண்டாலும் அங்கு உயிரிழப்புகள் ஏற்படவில்லை, வெளியில் போகும் போது நீர்சத்து குறைபாடு காரணமாக உயிரிழந்துள்ளனர்.
*விசாரணை ஆணையம் அமைத்து பொதுமக்களுக்கு தமிழக அரசு தெரியப்படுத்த வேண்டும்.
*உயிரிழந்தோரின் குழந்தைகளின் படிப்பு செலவை தமிழக காங்கிரஸ் ஏற்கும்.
*உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் சார்பில் ரூ.1 லட்சம் வழங்கப்படும் இவ்வாறு கூறினார்.
The post விமான சாகச நிகழ்ச்சி; வெயில் தாக்கத்தால் உயிரிழந்த 5 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்: செல்வப்பெருந்தகை appeared first on Dinakaran.