கன்னியாகுமரியில் ₹1 கோடியில் வளர்ச்சி பணிகள் பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்

கன்னியாகுமரி, அக்.5: கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள அவைக்கூடத்தில் நடந்தது. பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ரமாதேவி முன்னிலை வகித்தார். துணைத்தலைவி ஜெனஸ் மைக்கேல், கவுன்சிலர்கள் சுபாஷ், லிங்கேஸ்வரி, சுஜா, நித்தியா,பேரூராட்சி சுகாதார அதிகாரி முருகன், சுகாதார மேற்பார்வையாளர் பிரதீஷ், இளநிலை உதவியாளர் சந்திரகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தின்போது, கன்னியாகுமரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர், சாலை மற்றும் மின்விளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கு B1 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

The post கன்னியாகுமரியில் ₹1 கோடியில் வளர்ச்சி பணிகள் பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Related Stories: