பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலக மாடியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகுமார் தலைமை தங்கினார். பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த் ராவ், துணை தலைவர் ராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 5வது வார்டு கவுன்சிலர் மோகன் குமார் வரவேற்றார்.

இதில், மாமல்லபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு வடிகால் வாய்களை தூர் வார வேண்டும். புதிதாக சாலை அமைத்தல், மழைநீர் வடிகால்வாய் அமைத்தல், குடிநீர் தொட்டி அமைத்தல், மின் விளக்குகள் பொருத்துதல், பைப் லைன் உடைப்பை சரி செய்தல், பாதாள சாக்கடையை 5 வருடத்திற்கு ஒரு முறை தூர் வார வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

The post பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: