மீதி உள்ள ரூ.30 லட்சத்தை எடுத்து விட்டு வருவதாக கூறி விட்டு 2 பேர் மாயமாகி விட்டனர். இதில் வேடிக்கை என்னவென்றால் அவர்கள் கொடுத்த ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்துக்கு பதிலாக இந்தி நடிகர் அனுபம் கேரின் படம் அச்சடிப்பட்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நகை கடை ஊழியர்கள் அவர்களுடன் வந்திருந்த ஒருவரை பிடித்து கேட்டுள்ளனர். அப்போது அந்த நபர் தனக்கு எதுவும் தெரியாது என்றும் தான் பணத்தை எண்ணும் இயந்திரத்தை கொடுப்பதற்காக வந்தேன் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்த நகை கடை அதிபர் மெகுல் தாக்கர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post காந்திக்கு பதில் இந்தி நடிகர் படம் போட்ட கள்ள நோட்டுகள் குஜராத் நகை கடை அதிபரிடம் 2.1 கிலோ தங்கம் மோசடி appeared first on Dinakaran.