திருவேங்கடத்தில் 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு மரண தண்டனை விதிப்பு

நெல்லை: திருவேங்கடத்தில் 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. வழக்கில் 11 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் தண்டனை விவரங்களை நீதிமன்றம் அறிவித்தது. குற்றவாளிகள் பொன்னுமணி, குருசாமி, காளிராஜ், முத்துக்கிருஷ்ணன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 5 பேருக்கு ஐந்து ஆயுள் தண்டனையும், 2 பேருக்கு 2 ஆயுள் தண்டனையும் விதித்து நெல்லை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

The post திருவேங்கடத்தில் 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு மரண தண்டனை விதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: