சென்னை: செந்தில் பாலாஜியின் பிணை உத்தரவாதங்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்றது. இரு நபர் பிணை ஏற்கப்பட்டதால் சென்னை புழல் சிறையில் இருந்து சற்றுநேரத்தில் செந்தில் பாலாஜி விடுதலையாகிறார். சிறையில் இருந்து விடுவிக்கும் உத்தரவு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட இருக்கிறது.